நீயும் நானும்...
உனை கண் கொட்டாமல் பார்த்த நான்
எங்கோ பார்த்துச் சென்ற நீ
கடிகார முள்ளைப் போல்
உனை கடந்து சென்ற அத்தருணத்தில்,
உன் துப்பட்டா
எனும் கலாபம்
என் முகம் வருடிச்சென்றது.
'ஹா இது போதும் இந்த பிறவி வாழ..
நீ யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்
உன் நினைவுகள் மட்டும் போதுமடி எனக்கு'
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
வாழ்வது நீ மட்டுமே,
உனை ரசித்த
கல்லூரி நாட்கள் மட்டும்
வந்து வந்து போகுதடி கண்முன்
உயிர் வாழும் ஒவ்வோர் நொடியிலும்...
எண்ணமும் எழுத்தும்
>>