"காதல் கொண்ட காகம் ஒன்று"

வீட்டுக்கு வீடு
குடை வந்த போதிலும்,
சோம்பேறித்தனத்தின் இலக்கணமாய் 
கலட்டிவைக்கப்படாத ஆன்ட்டனாக்கள்,
நீ கரைய ஏதுவாய்...

மாம்.,
என்னவென்று கரைகிறாய்...??
'ஏன் நான் கருப்பாய் பிறந்தேன் என்றா..??'
கிளியின் மீது காதல் கொண்டாயோ...??
இப்படி நிதம் நிதம் கரைந்து புலம்புகிறாய் ..!
தப்பில்லை காகத்தாரே...

னால்., 
பிறிதொரு இடம் சென்று புலம்பு..
ஏனென்றால்,
இங்கு புலம்ப நான் இருக்கேன்...
"அடி கிளியே, நீ எங்க போன..??

"வழிப்பறி"

முதன் முதலாய்
வெயில் பூத்த சாலையொன்றில்
தான் உனைப்பார்த்தேன்,
ஒரு நொடியிலே  
என் இதயத்தை வழிப்பறி செய்து போனாய்...!
இன்று தேடினாலும் கிடைக்காத
தொலைந்து போன நிமிஷமாய் நீ...!
இதயமின்றி வாழும் இயந்திரனாய் நான்...!

"மழையழகி"

மழையழகி.,
உன்னை ரசித்துக்கொண்டே இருப்பேனடி...!
இலை நுனியில் ஒரு துளி உலகமாய்
நீ எடுத்த அவதாரம் அழகு;
தெருவினில் சிறுவர்கள் கப்பல் விட்டு மகிழ
சிறு நதி செய்தாய்- அது அழகு;
கல்லூரிக் காலத்தில் 
அவளது குடையின் கீழ் தஞ்சம் தரச்செய்தாய் 
கோடி அழகு, அது உந்தன் கொடை அழகு;
சேர் நிரம்பிய சாலை அழகு;
சன்னல் ஓரச் சாரல் அழகு; 
கேடயம் தூக்கும் காளான்படை அழகு;
பறவையில்லா வானம் சிறு திரிஷ்ட்டிப்பொட்டோ..?
அவளின் கொலுசொலியை நினைவூட்டும்
ஜல் ஜல் சப்தம் அழகு;
 
கொடியிலிருக்கும் துணியை
அவசர அவசரமாய் அள்ளிச்செல்லும் தாவணிப்பெண்
அழகோ அழகு;
முதல்த்துளி 
காதலியின் இதழில் முத்தமிட்டு
சந்தோசத்தில் துள்ளித்தெறிக்கும் நொடி அழகு;  
குடிசை
க்கூரை வழி 
எட்டிப்பார்க்கும் விறகடுப்புப் புகை அழகு;  
மேகம் அழகு;
மின்னல் அழகு;
இடித்தாளம் அழகு; 

மண்வாசம் அழகு;
மேகத்தின் மை பூசிய வேஷம் அழகு;
 
முழுமையும் அழகு;
முற்றிலும் அழகு;

மொத்தத்தில்  
நீயென்றால்
தனிஅழகு;
எந்தன்
ஏகாந்த மழையழகி...!

 எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

எந்தன் உமை நீ தானே...!





















காதலே..!
உன்னை தேகம் நணைத்த மழையென்பேனா..?
இல்லை சுவாசம் ஒவ்வாப் புகையென்பேனா..?
என் தேவதேவியே..!
என்னில் பாதி நீ என்பதால்

நான் சிவனார் ஆயினேன்...
இந்த தேவநிலை
நூறு ஜென்மம் நிலைத்திடவே 
எமனாரைத்தான் வேண்டினேன்...
கண்ணே..!
என் தேவதேவி.,
களங்கமில்லாக் காதல் தேவி.,
என்னில் உமை நீ தந்துவிட்டதால்
எந்தன் உமை நீ தானே...!

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"மரணவேசி"

















'என் மேல் உனக்கு உரிமையில்லை'
என்று நீ சொன்ன பிறகு
நான் மரணவேசியை
முத்தமிட ஆசைகொண்டேன்...
அக்கணம்,
அந்த ஆசை தவறென சொல்வதற்கு மட்டும்
நீ எவ்வாறு உரிமை கொண்டாய்..?
பதிலுக்கு.,
வெறும் நண்பன் என்கிறாய், நயவஞ்சகி...

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"கவிதை மகள்"























நான் -
உன் மனதில்
வேண்டாத துருவாகினேன்...
நீ  -
என் ஒவ்வொரு கவிதைக்கும்
கருவாகினாய்...
என் கவிதை மகளே..!




எண்ணமும் எழுத்தும் 
  >>தீஸ் பழனி<<

"பயித்தியகாரத்தனமான பதிவுகள்- பகுதி 2"


"பொய்கள்"


















நான்:
உன் பேர் எழுதும்பொழுது மட்டும்
'காகிதக் காதலனை 
முத்துக்களாய் முத்தமிடுகிறாள் 
எனதருமைப் பேனாப்பெண்'
அந்த எழுத்துக்கள் தேனீக்களாய் மாறி
நம் காதலைப் பாடுகிறது மெல்லிய ரீங்காரமாய்
தேனீக்கள் எங்கிருந்து வந்தன...?
தெரியவில்லையடி
'பனிப்பூவைப்  போல தேன் சுரக்கிறது 
உன் பெயர் சொல்லும் எழுத்துக்கள்'
ஆகையால் தான்
எறும்புகள் மொய்கின்றனவோ...??
ஐய்யஹோ
வலிக்குமே என் செல்லத்திற்கு...
எனவே,
'வெண்மயில் பீலிகையைத் தேடினேன் 
வன்மையான நாளிகையைச் சாடினேன்'
கவலை வேண்டாமென் காதலியே
நான் விசுறுகிறேன்
நீ துயில்தேசம் போ  
அங்கேயும் நான் தான் இருப்பேன்  
என் காதலியே  
இப்போது புரிகிறதா  
உன் பெயருக்கு நான் விசிறிவிட்ட காரணம்...?




நீ: 
டே லூசாடா நீ..? என் பேருக்கு விசிறிவிடுவியா...?
மொதல்ல எனக்கு விசிறிவிடு 
கவிதை எழுத சொன்ன மொக்கா போடுறியா..?
உன்ன கொல்லப்போறேன்...

எனக்கு ஒரு சந்தேகம் 
இப்போ நான் சொன்னது கவிதையா...?
இல்ல அவ சொன்னது கவிதையா...?  
இல்லனா அவ சொன்னதால அது கவிதைமாதிரி தெரியுதா...?
சத்தியமா அவ சொன்னதுதான் கவிதை 
வேணாம்ப்பா இத சொன்னா
மறுபடியும் மொக்க போடறான்னு சொல்லுவா... 
    

எண்ணமும் எழுத்தும்  >>தீஸ் பழனி<<

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.