காகிதக் கப்பலேறி
கடல் நெடுகப்பயணம் சென்றேன்
கடற்க்கன்னி காண சென்றேன்
காதல் தன்னைக் கூற சென்றேன்
மழைப் பெண்ணும் பூக்கள்
தூவி மனமார வரவேற்றாள்;
காற்றுப் பெண் இசைமீட்டி
காதோரம் பாடிச் சென்றால்;
குளிர்ப் பெண்ணோ கட்டியணைத்தால்
மழைப் பெண்ணின் வருகை கண்டு;
நிலவுப் பெண் கர்வமுற்றால்
குளிர்ப்பெண்ணின் விஷமத்தால்;
இத்தனை பெண்கள் கண்டேன்
எனக்கான பெண் எங்கே..?
எந்தன் ஆசைக்கடற்கன்னி..!
மெல்லிய அலை நிலை மாறிப்போனதால்
கடல் பெண்
சலனமுற்று
என்கப்பல் அங்குமிங்கும் ஆடச் செய்தால்
நிலைகுலைந்த காகிதப் பெண்
நிதர்சனமாய் மூழ்கிப்போனால்,
நானும் ஆங்கே இறந்து போனேன்
கனவில் எந்தன் கன்னியோடு,
காகிதத்தில் பொறித்திருந்த
காதல் கொஞ்சும் வரிகள் கண்டு,
அங்குமிங்கும் தேடிப் பார்த்தால்
எந்தன் ஆசைக் கடற்கன்னி...
ஆங்கே.,
எந்தன் உயிரற்ற உடல்கண்டு
ஓயாமல் அழுதுபுலம்ப
கடல் நீரும் பெருகிப் போச்சே
கண்ணே உன் கண்ணீரால்...
அழுதழுதே மாண்டுபோனால்
ஐய்யஹோ.,
என் காதல் தேவி
என்னால் தான் மரித்துப்போனாள்
ஆவியாய் நான் புலம்பி நின்றேன்,
சொர்கச்சாவியாய் கடற்கன்னி- நீ
என்னருகே வந்ததென்ன..??
எந்தன் மகிழ்ச்சிக்கோ எல்லையில்லை
"நம் உடல் கடந்த காதல் வாழ்க"
என்று கதைத்து சொர்க்கம் சென்றோம்...
எண்ணமும் எழுத்தும்
>>